கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 April 2022 2:29 PM IST (Updated: 12 April 2022 2:29 PM IST)
t-max-icont-min-icon

வில்லியம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் அடுத்த ஆத்தூர் தென்பாதி சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக செங்கல்பட்டு தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் கஞ்சா விற்ற பிரேம்குமார் என்கிற கருப்பன் (வயது 28) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2¾ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
1 More update

Next Story