பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்துக்காக கட்டாஞ்சி மலைப் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் நிறைவு பெறும். கூடுதலாக 178 எம்எல்டி தண்ணீர் கிடைக்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்


பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்துக்காக கட்டாஞ்சி மலைப் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் நிறைவு பெறும். கூடுதலாக 178 எம்எல்டி தண்ணீர் கிடைக்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்
x
தினத்தந்தி 12 April 2022 7:11 PM IST (Updated: 12 April 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்துக்காக கட்டாஞ்சி மலைப் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் நிறைவு பெறும். கூடுதலாக 178 எம்எல்டி தண்ணீர் கிடைக்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்


கோவை

பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்துக்காக கட்டாஞ்சி மலைப் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் நிறைவு பெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்

கோவை மாநகராட்சியில் 20 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மாநகராட்சி பகுதி மக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

இதற்காக மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 200 எம்.எல்.டி. முதல் 230 எம்.எல்.டி. வரை குடிநீர் கிடைத்து வருகிறது. 

இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் வருகிற 2035-ம் ஆண்டு  மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு ரூ.779 கோடியில் பில்லூர் குடிநீர் திட்டம்- 3 செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆய்வு

இந்த திட்டத்திற்காக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டிபெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும். 

மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை ஆகிய இடங்களில் ரூ.134 கோடியில் தலைமை நீரேற்று நிலையம் கட்டும் பணி 30 சதவீதம் முடிந்து உள்ளது.

சுரங்கம் அமைக்கும் பணி

முருகையன் பரிசல் துறையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதூர் பகுதிக்கு குடிநீர் பம்ப் செய்து கொண்டு வரப்படுகிறது. 


மருதூர் ஊராட்சி தண்டிப்பெருமாள் புரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் 100 சதவீதம் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டாஞ்சி மலைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 

இதற்காக இந்த மலையில் 900 மீட்டர் தொலை விற்கு சுரங்கம் அமைக்கப்படுகிறது. இதில் தற்போது வரை 830 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவு பெற்று உள்ளது.

குடிநீர் வினியோகம்

இன்னும் 70 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி 20 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். பின்னர் இங்கிருந்து  நீர்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story