பெயிண்டரை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார்


பெயிண்டரை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 20 April 2022 7:43 PM IST (Updated: 20 April 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

பெயிண்டரை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார்


கணபதி

கோவை ரத்தினபுரி ராஜுநாயுடு முதல் வீதியை சேர்ந்தவர் குணா (வயது34). பெயிண்டர். 

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (24). தனியார் நிறுவன ஊழியர். 

இவர்கள் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். 

மேலும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து குணாவின் வீட்டில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.


இதனால் சந்தோஷ் அடிக்கடி குணாவின் வீட்டுக்கு வந்து சென்றார். இதனால் அவருக்கு குணாவின் மனைவியுடன்  பழக்கம் ஏற்பட்டது. 

இதை அறிந்த குணா தனது மனைவி மற்றும் சந்தோஷை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் குணாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். 

இதில் படுகாயம் அடைந்த குணா சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இது குறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.

1 More update

Next Story