முத்துமாரியம்மன் கோவில் கொட்டகைக்கு தீ வைப்பு?


முத்துமாரியம்மன் கோவில் கொட்டகைக்கு தீ வைப்பு?
x
தினத்தந்தி 27 April 2022 7:21 PM GMT (Updated: 27 April 2022 7:21 PM GMT)

முத்துமாரியம்மன் கோவில் கொட்டகைக்கு தீ வைப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் கீற்று கொட்டகையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை கோவில் கீற்று கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கீற்று கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பலானது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் கீற்று கொட்டகைக்கு யாரேனும் தீ வைத்தார்களா?, அல்லது தீ விபத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story