வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை- ரூ.15 ஆயிரம் கொள்ளை


வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை- ரூ.15 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 16 May 2022 12:15 AM IST (Updated: 15 May 2022 6:32 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே ஆழியூரில் வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிக்கல்:-

கீழ்வேளூர் அருகே ஆழியூரில் வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டு கதவு உடைப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆழியூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ரபி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாரிஷா (வயது25). கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அதிராம்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் வாசல் கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாரிஷாவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாரிஷா உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. 

நகை-பணம் கொள்ளை

அதில் வைத்திருந்த கைச்செயின் உள்பட 3 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
1 More update

Next Story