கார்கள் மோதல்; முதியவர் பலி


கார்கள் மோதல்; முதியவர் பலி
x
தினத்தந்தி 16 May 2022 7:09 PM GMT (Updated: 16 May 2022 7:09 PM GMT)

விருதுநகர் அருகே கார்கள் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பலியானார். பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே கார்கள் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பலியானார். பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார்கள் மோதல்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணன் (வயது 57). தனியார் நிறுவன அதிகாரி. இவரது மனைவி அருள்மதி (57). இவர்கள் காரில் தென் மாவட்டங்களுக்குச் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். 
காரை பாண்டியன் (22) என்பவர் ஓட்டி வந்தார்.
விருதுநகர்-சாத்தூர் இடையே பட்டம் புதூர் விலக்கு அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே கார் வந்து கொண்டிருந்தது. 
அப்போது எதிரே மருளூத்து கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்காக திரும்பியபோது, இவர்களது கார் மீது மோதியது.

முதியவர் பலி

இந்த விபத்தில் ஸ்ரீகிருஷ்ணன், அருள்மதி மற்றும் டிரைவர் பாண்டியன் ஆகிய 3 பேரும் மோதிய காரை ஓட்டி வந்த ரவிச்சந்திரன், காரில் இந்த மருளூத்து கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா(60) என்ற முதியவரும் படுகாயமடைந்தனர். 
ஸ்ரீ கிருஷ்ணன் உள்பட 3 பேரும் அந்த வழியாக சென்ற வாகனங்களில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர். ரவிச்சந்திரனும் சுப்பையாவும் ஒரு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சுப்பையா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். 
இதுபற்றி சூலக்கரை போலீசில் ஸ்ரீகிருஷ்ணன் புகார் செய்ததின் பேரில் போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story