போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை


போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 May 2022 4:19 PM GMT (Updated: 18 May 2022 4:19 PM GMT)

மேட்டுப்பாளையம் அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீஸ் ஏட்டு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சாய்நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 39). இவர் காரமடை போலீஸ் நிலை யத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பிரியா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தாமோதரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தாக தெரிகிறது. இதை அவருடைய மனைவி கண்டித்துள்ளார். இதனால் தாமோதரன் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவர் அந்த பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளியே வர முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஊருக்கு அழைத்த மனைவி

இதற்கிடையே பிரியா கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு குழந்தைக ளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் தாமோத ரன், ஆலாங்கொம்பியில் உள்ள வீட்டில் தனது தந்தையுடன் தங்கி இருந்தார். 

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரியா தனது கணவரை தொடர்பு கொண்டு ஊருக்கு வருமாறு அழைத்து உள்ளார். அதற்கு அவர், ஊருக்கு வரமாட்டேன், செத்துப் போய் விடுவேன் என்று கூறியதாக தெரிகிறது.

தற்கொலை

கடந்த 16-ந் தேதி தாமோதரனின் தந்தை வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த தாமோதரன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் கடந்த 2 நாட்களாக வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த குமார் என்பவர் நேற்று காலை 7 மணிக்கு வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு தாமோதரன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. 

விசாரணை

இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ் பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

பின்னர் அவர்கள், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story