பொம்மிடி அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்

x
தினத்தந்தி 18 May 2022 9:49 PM IST (Updated: 18 May 2022 9:49 PM IST)
பொம்மிடி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டது.
மொரப்பூர்:
பொம்மிடி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் டியூஷனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது பையர்நத்தம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (வயது23) என்ற வாலிபர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தந்தை பொம்மிடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மற்றும் வாலிபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





