செல்போனில் வேறு பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி காதலி கொலை; சிறுவன் கைது


செல்போனில் வேறு பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி  காதலி கொலை; சிறுவன் கைது
x
தினத்தந்தி 18 May 2022 4:23 PM GMT (Updated: 18 May 2022 4:23 PM GMT)

செல்போனில் வேறு பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி காதலி கொலை; சிறுவன் கைது

மோகனூர்:
மோகனூர் அருகே செல்போனில் வேறு பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால் காதலியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வட மாநிலத்தவர்கள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நொச்சிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அதேபோல சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வேலை செய்து வருகிறார். இவரிடம், சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த அவருடைய நண்பரான 17 வயது சிறுவன் தனக்கும் கோழிப்பண்ணையில் வேலை வாங்கி தருமாறு கேட்டார்.
அதற்கு அந்த நபர் சம்மதம் தெரிவிக்கவே, சிறுவன் தனது காதலி போதி மாண்டவி (வயது 16) என்பவருடன் மோகனூர் அருகே உள்ள நொச்சிப்பட்டிக்கு வந்துள்ளார். இதையடுத்து சிறுவன், காதலி போதி மாண்டவி ஆகியோரை கோழிப்பண்ணை உரிமையாளரிடம் சிறுவனின் நண்பர் அழைத்து சென்றார். அங்கு கோழிப்பண்ணை உரிமையாளர், இங்கு குழந்ைத தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதில்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
செல்போன் பேச்சு
இதையடுத்து சொந்த ஊருக்கு செல்லும் வரை சிறுவன், அவனுடைய காதலி ஆகியோர் பண்ணையில் உள்ள தங்கள் மாநிலத்தவரின் வீட்டில் தங்கி இருந்ததாக தெரிகிறது. நேற்று காலை 8 மணி அளவில் சிறுவன் செல்போனில் வேறு ஒரு பெண்ணுடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த போதி மாண்டவி யாருடன் பேசி கொண்டிருக்கிறாய் என்று கேட்டதாக தெரிகிறது.
அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் காதலி என்றும் பார்க்காமல் துப்பட்டாவால் போதி மாண்டவியின் கழுத்தை இறுக்கினார். இதில் சிறிது நேரத்தில் இளம்பெண் துடிதுடித்து இறந்தார். இதை அறிந்ததும் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் போதி மாண்டவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 கைது
இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சிறுவனை கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்ேபானில் வேறு பெண்ணுடன் பேசியதை கண்டித்த காதலியை கழுத்தை இறுக்கி சிறுவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story