சின்னசேலம் அருகே வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு
சின்னசேலம் அருகே வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய தந்தை-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சக்திவேல் (வயது 29). இவருக்கும், பாண்டியன்குப்பத்தை சோ்ந்த செல்லப்பன் மகன் விஜய் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று, சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் அம்மையகரம் ஏரிக்கரை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மொபட்டில் வந்த விஜய் தனது தந்தை செல்லப்பனுடன் சோ்ந்து, சக்திவேலின் மோட்டார் சைக்கிளை மறித்து அவரை ஆபாசமாக திட்டி, செல்போனை கீழே போட்டு உடைத்துள்ளார். மேலும் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சக்திவேலின் தலையில் அடித்துள்ளார். இதில் காயமடைந்த சக்திவேல், சின்னசேலம் அரசு ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் விஜய் மற்றும் அவருடைய தந்தை செல்லப்பன் ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story