டெல்லியில் கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்


டெல்லியில் கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்
x

கோப்புப்படம் 

குதுப் ரோடு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் படிக்கட்டுகள் திடீரென சரிந்து விழுந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் சதர் பஜார் பகுதியில் நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் படிக்கட்டு இடிந்து விழுந்ததில் 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, சம்பவம் குறித்து நேற்று மாலை 6.28 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து இரண்டு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

குதுப் ரோடு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் படிக்கட்டுகள் திடீரென சரிந்து விழுந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர் பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் வசிக்கும் குலாப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு தொழிலாளி, அவர் கடையின் உரிமையாளரிடமும் வேலை செய்தார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story