மிசோரமில் கல் குவாரி இடிந்து விபத்து - 12 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அச்சம்


மிசோரமில் கல் குவாரி இடிந்து விபத்து - 12 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அச்சம்
x
தினத்தந்தி 14 Nov 2022 2:45 PM GMT (Updated: 14 Nov 2022 2:47 PM GMT)

மிசோரமில் இரண்டரை ஆண்டுகளாக குவாரி செயல்பட்டு வரும் கல் குவாரி ஒன்று இன்று இடிந்து விழுந்தது.

கவுகாத்தி,

மிசோரமில் இரண்டரை ஆண்டுகளாக குவாரி செயல்பட்டு வரும் கல் குவாரி ஒன்று இன்று இடிந்து விழுந்தது. இதில் பீகாரைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

ஹனாதியால் மாவட்டம் மவுதாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்தபோது கல்குவாரி இடிந்து விழுந்துள்ளது. இதில் 12 தொழிலாளர்கள், ஐந்து ஹிட்டாச்சி அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் பிற துளையிடும் இயந்திரங்கள் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லெய்ட் கிராமம் மற்றும் ஹனாதியால் நகரத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் மாநில பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளன.


Next Story