புதிய நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு


புதிய நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு
x

டெல்லி- அரியானா எல்லைப்பகுதியில் நுழைந்த விவசாயிகளை போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

புதுடெல்லி,

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் திறப்பை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன.

இந்த சூழலில், போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பேரணியின் முடிவில் நாடாளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கிராம தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இணையப்போவதாக கூறி உள்ளனர்.

இதனால், டெல்லியின் முக்கிய எல்லை பகுதிகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடுப்புகள் மற்றும் முள் வேலிகள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே டெல்லி- அரியானா எல்லைப்பகுதியில் நுழைந்த விவசாயிகளை போலீசார் தடுத்தி நிறுத்தினர்.


Next Story