சொசைட்டி சங்கத் தேர்தலில் சண்டை: 2 பெண்கள் காயம் - 2 பாதுகாவலர்கள் கைது


சொசைட்டி சங்கத் தேர்தலில் சண்டை: 2 பெண்கள் காயம் - 2 பாதுகாவலர்கள் கைது
x
தினத்தந்தி 21 Oct 2022 5:28 AM GMT (Updated: 21 Oct 2022 5:48 AM GMT)

நொய்டாவில் இருவேறு வேட்பாளர்களை ஆதரித்த இரண்டு குழுக்கள் மோதியதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.

நொய்டா,

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவின் ஹைட் பார்க் சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இருவேறு வேட்பாளர்களை ஆதரித்த இரண்டு குழுக்கள் மோதியதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பாதுகாவலர்களை கைது செய்தனர்.

நொய்டாவின் ஹைட் பார்க் சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு வெவ்வேறு வேட்பாளர்களை ஆதரித்த இரு குழுக்கள் நேற்று மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலில் இரண்டு பெண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

புஷ்பேந்திர பக்சாவிற்கும், தினேஷ் நேகி பக்சாவிற்கும், இடையே மோதல் ஏற்பட்டது, இதில் தினேஷ் நேகி பக்சாவை சொசைட்டியின் பாதுகாவலர்களால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் 2 பாதுகாவலர்களை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சண்டை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர், பெண் பாதுகாவலர் ஒருவரை முடியை பிடித்து இழுப்பது பதிவாகியுள்ளது. மேலும் சில பாதுகாவலர்கள் தடியுடன் சண்டையிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.


Next Story