வங்கிகளுக்கு எதிராக பிச்சைக்காரர் வழக்கு


வங்கிகளுக்கு எதிராக பிச்சைக்காரர் வழக்கு
x
தினத்தந்தி 9 Sept 2017 3:45 AM IST (Updated: 9 Sept 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு பிச்சைக்காரர் வங்கிகளை குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் பெயர் காஞ்சன் ருய்.

கொல்கத்தா,

கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு பிச்சைக்காரர் வங்கிகளை குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் பெயர் காஞ்சன் ருய்.

அவர் தனது மனுவில், ‘‘ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களால் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. வங்கிகளில் அந்த நாணயங்களுக்கு பதிலாக ரூபாய் நோட்டுகளை தர மறுக்கிறார்கள். இதனால், என்னிடம் ஏராளமான நாணயங்கள் குவிந்து விட்டன. எனது பிச்சைக்கார தொழிலும் பாதிப்படைந்துள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) நிஷிதா மாத்ரே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் சுசிஸ்மிதா சட்டர்ஜி, ‘ஒரு ரூபாயில் இருந்து அனைத்து நாணயங்களும் செல்லும். மனுதாரர், எந்த வங்கியையோ, கிளையையோ குறிப்பிட்டு கூறவில்லை’ என்று கூறினார்.

அதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் எந்த குறிப்பிட்ட வங்கியையும் பிரதிவாதியாக சேர்க்காததால், இந்த மனுவை திரும்பப்பெற்று, கூடுதல் விவரங்களுடன் புதிய மனு தாக்கல் செய்யுமாறு காஞ்சன் ருய்யுக்கு உத்தரவிட்டனர்.

1 More update

Next Story