உள்நாட்டு விவகாரங்களை ஏன் வெளிநாட்டிற்கு சென்று பேசுகிறீர்கள்? மோடிக்கு சிவசேனா கண்டனம்

உள்நாட்டு விவகாரங்களை ஏன் வெளிநாட்டிற்கு சென்று பேசுகிறீர்கள் என மோடிக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது. #ShivSena #PMModi
மும்பை,
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசுகையில் இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பேசினார். இந்நிலையில்
உள்நாட்டு விவகாரங்களை ஏன் வெளிநாட்டிற்கு சென்று பேசுகிறீர்கள் என மோடியை சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.
சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னா தலையங்கத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியை அல்லது காந்திய குடும்பத்தை ஒருவர் விரும்பாதவராக இருக்கலாம், ஆனால் உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசுவதால் யாருக்கும் பயனளிக்கப்போது கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி மற்றும் சரியான நேரத்தில் பேசுங்கள் என அறிவுரை வழங்கி உள்ளார். நான் பிரதமராக இருந்த போது எனக்கு கூறிய அறிவுரையை இன்று பின்பற்றங்கள் என மோடியை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டு உள்ளார். மன்மோகன் சிங் கொடுத்த அறிவுரையானது மிகவும் சரியானது. மோடியின் பக்தர்கள் தவிர இந்தியா முழுவதும் உள்ள மக்களின் எண்ணமும் அதுவாகவே உள்ளது. இருப்பினும் மன்மோகன் சிங் பாதி உண்மையை மட்டுமே கூறிஉள்ளார்.
மோடி இந்தியாவில் ஒரு பார்வையாளராகவும், வெளிநாட்டில் பேசுபவராகவும் இருக்கலாம். யாராவது பிரதமர் மோடியின் பேச்சை பார்க்க வேண்டும் என்றால், தேசத்தின் தலைநகரத்தை லண்டன், நியூயார்க், டோக்கியோ, பாரீஸ் அல்லது ஜெர்மனிக்கு மாற்ற வேண்டும். இது சாத்தியமானது கிடையாது. சினிமாவை போன்று வெளிநாடுகளிலும் தேசிய தலைநகரத்தை வடிவமைக்கலாம்.
இந்தியாவில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து லண்டனில் பேசுகிறார். அநீதிக்கு எதிராக அவரது மனதில் இருக்கும் தீப்பொறிகள் பற்றி பேசுகிறார். அயல்நாட்டு மண்ணில் தீப்பொறிகள் சுழன்று வருவதை நாங்கள் காண்கிறோம். பாலியல் பலாத்காரம் போன்ற விவகாரங்களில் பிரச்சனைகளை வெளிநாடுகளில் பேசுவது பிரதம மந்திரிக்கு சரியானதா? ஏன் அவமதிப்பு சம்பவங்கள் பற்றி வெளிநாட்டில் பேசுகிறீர்கள்? பரவலாக இருக்கும் ஊழல், பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பற்ற தேசம் பற்றி ஏன் வெளிநாட்டில் பேச வேண்டும்?
ஜப்பான் சென்ற போது இந்தியாவில் உள்ள கருப்பு பணம் மற்றும் ஊழல் குறித்து பேசினீர்கள். முந்தைய ஆட்சி காலத்தில் உங்களுக்கு ஒருவேளை எதிர்ப்பு இருந்து இருக்கலாம். காங்கிரஸ் அல்லது காந்தி குடும்பத்துடன் உங்களுக்கு ஆழமான எதிர்ப்பு இருந்து இருக்கலாம். ஆனால் உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசுவதால் யாருக்கும் பயன் அளிக்கப்போவது கிடையாது. வைர வியாபாரி நிரவ் மோடி நாட்டை கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிவிட்டார். மல்லையா லண்டனில்தான் உள்ளார். மல்லையாவிற்கு பாதுகாப்பு அளித்து உள்ள நாட்டிற்குதான் பிரதமர் மோடி சென்று உள்ளார், அவர் வரும்போது வெறும் கையுடன்தான் வருவார்.
உங்களுடைய பக்தர்கள் இதுதொடர்பாக பேசமாட்டார்கள். இப்போது மன்மோகன் சிங் பேச தொடங்கிவிட்டார், மோடி அமைதியாகிவிட்டார். இதனை பாரதீய ஜனதாவிற்கு எதிராக விதியால் முன்னெடுக்கப்பட்ட பழிவாங்கும் செயல் என்றே பார்க்க வேண்டும். மோடியை 15 நிமிடங்கள அமைதியாக இருங்கள் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டு உள்ளார். இது மோடி, மன்மோகன் சிங் போன்று ஆகிவிட்டார் என்பதற்கு சான்றாகும் என சிவசேனா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story