பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பேராயர் பிராங்கோ மூலக்கல் சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜர்


பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பேராயர் பிராங்கோ மூலக்கல்  சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜர்
x
தினத்தந்தி 19 Sep 2018 6:53 AM GMT (Updated: 19 Sep 2018 6:53 AM GMT)

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஜலந்தர் பேராயர் மூலக்கல் சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜர் ஆனார்.

கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவர் அங்குள்ள கன்னியாஸ்திரியை 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்க பிரான்கோ மூலக்கல் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை 25-ந் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 19-ந் தேதி ஆஜராகுமாறு பேராயர் பிராங்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, இன்று கொச்சியில் சிறப்பு விசாரணைக்குழு முன் பேராயர் மூலக்கல், விசாரணைக்காக ஆஜர் ஆனார். 

காலை 10.55 மணியளவில், பேரயார் மூலக்கல் விசாரணைக்குழு முன் ஆஜரானார்.  வைக்கம் டி.எஸ்.பி.கே.சுபாஷ் தலைமையிலான குழு, பேராயர் பிராங்கோவிடம் விசாரணை நடத்தி வருகிறது. 


Next Story