சரியாக முத்தம் கொடுக்கவில்லை: கணவரின் நாக்கை கடித்து துப்பிய கர்ப்பிணி பெண்


சரியாக முத்தம் கொடுக்கவில்லை:  கணவரின் நாக்கை  கடித்து துப்பிய கர்ப்பிணி பெண்
x
தினத்தந்தி 24 Sept 2018 10:49 AM IST (Updated: 24 Sept 2018 10:49 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கணவர் அழகாக இல்லை எனக்கூறி அவரின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அருகே உள்ள  ரானோலா பகுதியை சேர்ந்த 22 வயது கர்ப்பிணி பெண்  சம்பவத்தன்று கணவர் மனைவிக்கு ஆசையாக முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி அழகாக முத்தம் கொடுக்கவில்லை எனக்கூறி கணவரின் நாக்கை அரைமணி நேரம் கடித்து துப்பியுள்ளார். 

இதனால் வலியால் அலறி துடித்த அவர் சப்தர்ஜங்  மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மறுபடியும் பேச முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் 20, 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணமானதில்  இருந்து இந்த தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டுகொள்வார்கள் என்று அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்  326 ஆம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த கர்ப்பிணி பெண்ணிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் நன்றாக  முத்தம் கொடுக்கவில்லை எனக்கூறி கட்டிய மனைவியே கணவரின் நாக்கை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story