கர்நாடகாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு


கர்நாடகாவில்  கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
x
தினத்தந்தி 24 Nov 2018 9:14 AM GMT (Updated: 2018-11-24T14:44:44+05:30)

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.


பெங்களூர்

கா்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தின் கனகனமாரடி கிராமத்தில் காவிாி ஆற்றின் கிளை கால்வாயில் தண்ணீா் சென்றுகொண்டு இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் சென்ற தனியாா் பயணிகள் பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. 

கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து பக்காவட்டில் சாந்த நிலையில், பேருந்து முழுவதுமாக நீருக்குள் மூழ்கியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 15 பேர் உயிாிழந்ததாகவும், உயிாிழந்தவா்களில் பெரும்பாலானோா் மாணவா்கள் என்று காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.  தற்போது பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது

பேருந்து கால்வாயில் கவிழ்ந்ததை நேரில் பாா்த்த கிராம மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் இது தொடா்பாக காவல்துறை உயா் அதிகாாி ஒருவா் கூறுகையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாயில் மூழ்கியுள்ளது. பேருந்து நீரில் மூழ்கப்போவதை அறிந்த நபா் ஒருவா் பேருந்தில் இருந்து குதித்து உயிா் தப்பியுள்ளாா்.

Next Story