மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சொல்கிறார்


மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:30 PM GMT (Updated: 25 Dec 2018 10:41 PM GMT)

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மந்திரி கிரிராஜ்சிங் கூறியதாவது:-

நொய்டா,

நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது அவசியம். அதிக மக்கள் தொகையால் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. எந்த சாலையிலும் (போக்குவரத்து நெரிசல்), பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் என எல்லாவற்றிலும் இது தெரிகிறது. வேலைவாய்ப்பையும் பாதிக்கிறது. எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு சட்டம் இயற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகிறது.

2 குழந்தைகள் மட்டுமே சட்டம் அனுமதிக்கிறது என்றால் அதனை இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும். சட்டத்தை பின்பற்றாதவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story