3 ஆண்டு சிறைத் தண்டனை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு


3 ஆண்டு சிறைத் தண்டனை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
x
தினத்தந்தி 17 Jan 2019 11:41 AM GMT (Updated: 17 Jan 2019 11:41 AM GMT)

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

புதுடெல்லி

1998-ஆம் ஆண்டில், கல்வீசித் தாக்கி பேருந்துகள் உள்ளிட்ட பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது. இந்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்ற தகவல் இல்லை. மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி நாளை சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story