கொல்கத்தாவில் 3-வது நாளாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா


கொல்கத்தாவில் 3-வது நாளாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா
x
தினத்தந்தி 5 Feb 2019 3:52 AM GMT (Updated: 5 Feb 2019 3:52 AM GMT)

கொல்கத்தாவில் 3-வது நாளாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

கொல்கத்தா,

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். 

அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு நேரில் சென்றதோடு, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3-வது நாளாக  மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது.  அவருடைய கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜியுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் நேற்று தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தனர். 

Next Story