கிரண்பெடியை கண்டித்து முதல்-மந்திரி நாராயணசாமி தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றினார்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பெடியை கண்டித்து முதல்-மந்திரி நாராயணசாமி தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றினார்.
புதுச்சேரி,
புதுவையில் பொதுமக்களுக்கான திட்டங்களை கவர்னர் கிரண்பெடி தடுப்பதாக கூறியும், அவரை கண்டித்தும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்தநிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பெடியை கண்டித்து முதல்-மந்திரி நாராயணசாமி தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றினார். முதலமைச்சரை தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.
Related Tags :
Next Story