ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்


ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்
x
தினத்தந்தி 7 March 2019 6:52 AM GMT (Updated: 7 March 2019 7:23 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரின் பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.  பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாநில அரசு பேருந்து மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்தனர்.

குண்டு வீச்சில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story