மேற்கு வங்காளத்தில் 2 பா.ஜ.க. தொண்டர்கள் துப்பாக்கி சூட்டில் காயம்


மேற்கு வங்காளத்தில் 2 பா.ஜ.க. தொண்டர்கள் துப்பாக்கி சூட்டில் காயம்
x
தினத்தந்தி 12 May 2019 2:07 AM GMT (Updated: 12 May 2019 2:07 AM GMT)

மேற்கு வங்காளத்தில் 2 பா.ஜ.க. தொண்டர்கள் நேற்றிரவு துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.  மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.  

இன்று ஓட்டு பதிவு நடைபெறும் 59 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றி இருந்தன.  இதனால் இந்த தொகுதிகளை தக்க வைக்கும் வகையில் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதேபோன்று ஆளும் பா.ஜ.க.வுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் இந்த தேர்தலில் பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.  இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜக்ராம் நகரில் கோபிபல்லபூர் என்ற பகுதியில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் நேற்றிரவு இறந்து கிடந்துள்ளார்.  மர்ம மரணம் அடைந்த அவர் ராமன் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், 2 பா.ஜ.க. தொண்டர்கள் நேற்றிரவு துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர்.  கிழக்கு மேதினிப்பூர் பகுதியில் பகாபன்பூர் என்ற இடத்தில் சுடப்பட்டு கிடந்த அனந்த குச்சைட் மற்றும் ரஞ்சித் மைத்தி ஆகிய இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story