2 நாள்கள் சுற்றுப்பயணமாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை


2 நாள்கள் சுற்றுப்பயணமாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை
x
தினத்தந்தி 14 May 2019 1:30 AM GMT (Updated: 14 May 2019 1:30 AM GMT)

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷரீப் இரண்டு நாள்கள் பயணமாக நேற்று இரவு இந்தியா வந்தார்.

புதுடெல்லி,

ஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருந்தது வந்தது.  இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக டிரம்ப் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது முதல், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது. 

அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் ஈரான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரீப், இரண்டு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று இரவு வருகை தந்தார். 

இன்று அவர் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச உள்ளார்.  முன்னதாக அமைச்சர் ஜாவத், ரஷியாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினார். 


Next Story