பா.ஜனதாவால் நான் கொல்லப்படலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

x
தினத்தந்தி 18 May 2019 6:27 PM IST (Updated: 18 May 2019 6:27 PM IST)
இந்திரா காந்தியை போன்று நான் கொலை செய்யப்படலாம், பா.ஜனதா என்னுடைய உயிருக்கு ஆபத்தாக உள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பஞ்சாப்பில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்திரா காந்தி தன்னுடைய பாதுகாவலரால் கொல்லப்பட்டது போன்று என்னையும் பா.ஜனதா என்னுடைய பாதுகாவலரை வைத்து கொலை செய்யலாம். என்னுடைய பாதுகாவலர்கள், தகவலை பா.ஜனதாவிற்கு தெரிவித்து வருகிறார்கள். என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது, பா.ஜனதா என்னை ஒருநாள் கொலை செய்யலாம் எனக் கூறியுள்ளார். பஞ்சாப்பில் இறுதிக்கட்ட தேர்தலை மேற்கொண்ட போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





