மணிப்பூரில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி பதவியை துறந்தனர் பா.ஜனதாவில் இணைய முடிவா?


மணிப்பூரில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி பதவியை துறந்தனர் பா.ஜனதாவில் இணைய முடிவா?
x
தினத்தந்தி 30 May 2019 10:45 PM GMT (Updated: 30 May 2019 10:38 PM GMT)

மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இம்பால்,

நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், மணிப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர், தங்களது கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் கெய்காங்கத்திடம் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். ராஜினாமாவை ஏற்பது பற்றி ராகுல் காந்தி முடிவு எடுப்பார் என்று கெய்காங்கம் தெரிவித்தார்.

12 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் இணைவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால், கட்சியை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்றும், கட்சியை அடிமட்டத்தில் பலப்படுத்தவே கட்சி பதவியை விட்டு விலகி உள்ளோம் என்றும் அவர்கள் கூறினர்.

Next Story