டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது; பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு


டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது; பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Jun 2019 6:18 AM GMT (Updated: 16 Jun 2019 6:18 AM GMT)

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை 2வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 38க்கும் மேற்பட்ட சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான பிரச்சினைகளுக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த கூட்டத்தொடரில், முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டம் நடைபெறுகிறது.  இதேபோன்று பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி நிர்வாக குழு கூட்டமும் இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறும்.

இந்நிலையில், டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது.  இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  கூட்டத்திற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ், மேலவை பா.ஜ.க. தலைவர் தவார் சந்த் கெலாட் உள்ளிட்டோர் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளனர்.

17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவையை எப்படி சுமுகமுடன் கொண்டு செல்வது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

Next Story