மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்கிறது பாகிஸ்தான் போலீஸ்


மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்கிறது பாகிஸ்தான் போலீஸ்
x
தினத்தந்தி 4 July 2019 11:12 AM GMT (Updated: 4 July 2019 11:12 AM GMT)

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய உதவியாளரை பாகிஸ்தான் போலீஸ் கைது செய்ய உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அரங்கில் கடும் நெருக்கடி காரணமாக பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிகாரிகள் பயங்கரவாத நிதியுதவி மற்றும் பணமோசடி போன்ற பல குற்றங்களை செய்ததற்காக பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய நெருங்கிய உதவியாளருக்கு எதிராக பஞ்சாப் மாகாண போலீஸ் 23 வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஹபீஸ் சயீத் 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவனுக்கு எதிராக விசாரணை முகமைகள் வழக்குகளை பதிவு செய்வதில் தீவிரம் காட்டுகிறது. விரைவில் அவனை பாகிஸ்தான் போலீஸ் கைது செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story