வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம்


வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 5 July 2019 10:04 AM GMT (Updated: 5 July 2019 10:04 AM GMT)

மத்திய பட்ஜெட் வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

மத்திய பட்ஜெட் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாகவும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது. பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன். ஏழைகளுக்கான பட்ஜெட் இது.  இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் மற்றும்  கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன.

5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக, நாட்டை உருவாக்கிடும் முதல் படியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. 

இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். 

21 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். நடுத்தர மக்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி  முறை மேலும் எளிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

கடனில் வாங்கப்படும் மின்சார வாகனங்களுக்கு, ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

எலக்ட்ரிக், பேட்டரி என சுற்றுச்சூழல் பாதுகாக்கும் அம்சங்கள் கொண்ட பசுமையான பட்ஜெட் இது. எதிர்காலத்திற்கான பட்ஜெட்டை அளித்துள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுகள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Next Story