மும்பை போலீசை கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இந்தி நடிகர் கைது


மும்பை போலீசை கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இந்தி நடிகர் கைது
x
தினத்தந்தி 19 July 2019 8:00 PM GMT (Updated: 19 July 2019 7:29 PM GMT)

மும்பை போலீசை கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இந்தி நடிகர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஷ் அன்சாரி என்ற இஸ்லாமிய வாலிபர் கொல்லப்பட்டதை மையப்படுத்தி டிக்-டாக் வீடியோ வெளியிட்ட சிலர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தி நடிகர் அஜாஸ் கான் மும்பை போலீசை கேலி செய்யும் விதமாக ஒரு டிக்-டாக் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசார் நடிகர் அஜாஸ் கான் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


Next Story