அசாமில் தொழிலாளி உயிரிழப்பு; சிகிச்சை அளித்த டாக்டர் கொலை: எதிர்ப்பு தெரிவித்து பேரணி


அசாமில் தொழிலாளி உயிரிழப்பு; சிகிச்சை அளித்த டாக்டர் கொலை:  எதிர்ப்பு தெரிவித்து பேரணி
x
தினத்தந்தி 2 Sep 2019 2:24 AM GMT (Updated: 2 Sep 2019 2:24 AM GMT)

அசாமில் சிகிச்சையில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளியின் குடும்பத்தினர் தாக்கி மருத்துவர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது.

ஜோர்ஹத்,

அசாமில் சிகிச்சையில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளியின் குடும்பத்தினர் தாக்கி மருத்துவர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது.

அசாமில் ஜோர்ஹத் நகரில் தியோக் பகுதியில் தேயிலை தோட்டமொன்று அமைந்துள்ளது.  இங்கு பணியாற்றி வந்த சோம்ரா மஜ்ஜி என்ற பெண் தொழிலாளி தேயிலை தோட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.  இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

ஆனால் சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் பணியில் இல்லாததே தொழிலாளி உயிரிழப்புக்கு வழிவகுத்து விட்டது என கூறி அங்கிருந்த சக தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளியின் உறவினர்கள், மருத்துவர் தேவன் தத்தா (வயது 73) என்பவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் பின்னர் உயிரிழந்து விட்டார்.  இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என துணை ஆணையர் கொரட்டி கூறினார்.

இந்நிலையில், அசாமின் திப்ரூகார் நகரில் உள்ள மருத்துவ கல்லூரியை சேர்ந்த இளநிலை மருத்துவர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி, மருத்துவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றனர்.

Next Story