”விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது” பாகிஸ்தான் குறித்து ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் குற்றச்சாட்டு


”விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது” பாகிஸ்தான் குறித்து ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Sep 2019 9:19 AM GMT (Updated: 20 Sep 2019 9:19 AM GMT)

விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது அவர்கள் தரக்குறைவாக நிற்கும்போது நாம் உயருவோம் என பாகிஸ்தான் குறித்து ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் சையது அக்பருதீன் கூறினார்.

புதுடெல்லி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் உரையில்  காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்போவதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

வரவிருக்கும் யுஎன்ஜிஏ அமர்வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உரைக்கு பதிலளிப்பது குறித்து  ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் சையது அக்பருதீன் கூறும் போது, 

நீங்கள் என்ன தந்திரோபாய அணுகுமுறையைப் பயன்படுத்துவீர்கள் என்று எல்லோரிடமும் சொல்வது மோசமான தந்திரமாகும். நீங்கள் பாராட்டுவீர்கள ஆனால்  நான் ஒரு மோசமான தந்திரவாதி அல்ல. 

"இந்த முறை முன்னோடியில்லாத வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது உறுதியான நடவடிக்கை மூலம்  விளைவுகளை எதிர்பார்க்கலாம். 

அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் (யு.என்.ஜி.ஏ) உயர்மட்டக் கூட்டத்திற்கு முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதர் சையத் அக்பருதீன், உலக அரங்கில்  காஷ்மீர் விவகாரத்தில்  வீழ்த்த திட்டமிட்டுள்ள பாகிஸ்தானை குற்றஞ்சாட்டி  பேசினார்.

உலகளாவிய பிரச்சினைகளை எவ்வாறு அணுக விரும்புகிறது என்பதை ஒவ்வொரு நாடும் தீர்மானிக்க வேண்டும். சிலர் தாழ்ந்தவர்களாக இருக்கலாம், அவர்களுக்கு பதில் நாம் உயர்கிறோம் .

கடந்த காலங்களில் நடந்த அவர்களின்  பயங்கரவாத நடவடிக்கைகளை  நாங்கள் கண்டிருக்கிறோம், அவர்கள் இப்போது என்னுடைய வெறுக்கத்தக்க பேச்சை பிரதானமாகக் கொள்ள விரும்பலாம். 

விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது, நாம் உயருவோம்  என்று நம்புகிறோம்,. நாங்கள் தலை குனிய மாட்டோம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை நாங்கள் உங்களுக்கு பலமுறை வழங்கியுள்ளோம்.  அவர்கள்  தரக்குறைவாக நிற்கும்போது நாம் உயருவோம் என கூறினார்.

காலநிலை நடவடிக்கை குறித்து வளரும் நாடுகளுடன் சேர்ந்து ஈடுபடுவதே  இந்தியாவின் கவனம்  இருக்கும் என்று அக்பருதீன் கூறினார்.

Next Story