தூய்மையான ரெயில் நிலையங்களில் ஜெய்ப்பூருக்கு முதலிடம்


தூய்மையான ரெயில் நிலையங்களில் ஜெய்ப்பூருக்கு முதலிடம்
x
தினத்தந்தி 2 Oct 2019 8:55 PM GMT (Updated: 2 Oct 2019 8:55 PM GMT)

தூய்மையான ரெயில் நிலையங்களில் ஜெய்ப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

புதுடெல்லி,

ரெயில் நிலையங்களின் தூய்மை தரம் குறித்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் 3-ம் நபர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதில் 407 ரெயில் நிலையங்களின் தர அறிக்கை வெளியிடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு 720 ரெயில் நிலையங்களும், முதல் முறையாக புறநகர் ரெயில் நிலையங்களும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வின்படி ரெயில் நிலையங்களின் தூய்மை தரவரிசைப் பட்டியலை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் வெளியிட்டார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களை ராஜஸ்தான் மாநிலம் பிடித்து உள்ளது. அங்குள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபுரா ரெயில் நிலையங்கள் முதல் 3 இடங்களை பிடித்து உள்ளன.

மேலும் 109 புறநகர் ரெயில் நிலையங்களில், அந்தேரி, விரார், நைகான் ரெயில் நிலையங்கள் முதல் 3 இடங்களை பெற்றுள்ளன. இதைப்போல ரெயில்வே மண்டலங்களில் முதல் 3 இடங்கள் முறையே வடமேற்கு ரெயில்வே, தென்கிழக்கு மத்திய ரெயில்வே, கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலங்களுக்கு கிடைத்து உள்ளன.

Next Story