பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்


பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2019 6:34 AM GMT (Updated: 15 Oct 2019 6:34 AM GMT)

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

புதுடெல்லி

பாகிஸ்தான் சீனா உள்பட அனைத்து நட்பு நாடுகளின் உதவியுடன் 1267  தீர்மானத்தின் கீழ் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை அணுக உள்ளது.  பாகிஸ்தானை குறிவைத்த இஸ்லாமிய அரசு பயங்கரவாதி என்று வர்ணிக்கும் இந்தியர் அஜோய் மிஸ்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் அல் கொய்தா பொருளாதாரத் தடைகள் பட்டியலில் மிஸ்திரியைச் சேர்க்க பாகிஸ்தான் முன்மொழிய 1267 கமிட்டியின் தலைவரால் இந்த மாதத்தில் மற்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

சவுத் பிளாக் அதிகாரிகளின் கூற்றுப்படி, 1267 தீர்மானத்தின் கீழ் அஜோய் மிஸ்திரியை  "ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஐ.எஸ்.ஐ.எல்-கோராசனுடன் இணைந்து பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டதாக  விவரிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் டிரான்ஸ்மிஷன் லைன்களில் பணிபுரியும் இந்திய  பொறியியலாளர் வேணுமாதவ் டோங்காராவை 1267 கமிட்டியால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் வழங்கிய திட்டத்தை கடந்த மாதம் அமெரிக்கா தடுத்தது.

செப்டம்பர் 18, 2015 அன்று பெஷாவர் விமான நிலையத்தை தாக்கியதாகக் கூறப்படும் தாரிக் கிதார் பயங்கரவாதக் குழுவுக்கு ஆயுதங்கள்,  வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை வழங்கிய குற்றச்சாட்டில் இஸ்லாமாபாத் 2019 மார்ச் 11 அன்று பெஷாவரில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு  செய்தது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், "சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளை அனுப்புவதில்  அவர் ஈடுபட்டதாகவும், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஐ.எஸ்.ஐ.எல்-கோர்சன் தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தியதாகவும்" கூறப்பட்டு உள்ளது.

 டோங்காராவை அடுத்த குல்பூஷண் ஜாதவ் ஆக்குவதற்கு பாகிஸ்தான் விரும்பக்கூடும் என்ற அச்சத்தில், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் செப்டம்பர் 8 அன்று ஆப்கானிஸ்தானில் இருந்து பொறியாளரை திரும்ப அழைத்து கொண்டது.

குறைந்தது மூன்று அல்லது நான்கு இந்திய நாட்டினரை இது போல் தீவிரவாதிகளாக பாகிஸ்தான் முயற்சிக்கக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் உள்ளிட்ட பல பாகிஸ்தான் குடிமக்கள் உலகளாவிய பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான்  சீனாவின் உதவியுடன் இந்திய நாட்டவரை பயங்கரவாதிகளாக காட்டுவதன் மூலம் இந்தியாவை மிரட்ட விரும்புகிறது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Next Story