குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் பேரணி

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றி உள்ளது.
இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் மேற்கு வங்காளத்திலும் பரவி உள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுக்கும் அதே சமயத்தில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. சென்னை, டெல்லி உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் பேரணியில் பங்கேற்று உள்ளனர்.
Related Tags :
Next Story