‘யெஸ்’ வங்கியால் இமாசலபிரதேசத்தில் ரூ.1,900 கோடி முடக்கம்

x
தினத்தந்தி 13 March 2020 12:40 PM IST (Updated: 13 March 2020 12:40 PM IST)
‘யெஸ்’ வங்கியால் இமாசலபிரதேசத்தில் ரூ.1,900 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
சிம்லா,
நிதி நெருக்கடி, வராக்கடன் போன்ற காரணங்களால் ‘யெஸ்’ வங்கியை கடந்த வாரம் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதனால் வங்கியின் பரிவர்த்தனை முடக்கப்பட்டது.
இமாசலபிரதேச மாநிலத்தில் யெஸ் வங்கியின் 9 கிளைகள் இருந்தன. அவற்றில் மாநில அரசு மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.1,919 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த தகவலை சட்டமன்ற கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





