‘யெஸ்’ வங்கியால் இமாசலபிரதேசத்தில் ரூ.1,900 கோடி முடக்கம்
‘யெஸ்’ வங்கியால் இமாசலபிரதேசத்தில் ரூ.1,900 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
சிம்லா,
நிதி நெருக்கடி, வராக்கடன் போன்ற காரணங்களால் ‘யெஸ்’ வங்கியை கடந்த வாரம் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதனால் வங்கியின் பரிவர்த்தனை முடக்கப்பட்டது.
இமாசலபிரதேச மாநிலத்தில் யெஸ் வங்கியின் 9 கிளைகள் இருந்தன. அவற்றில் மாநில அரசு மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.1,919 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த தகவலை சட்டமன்ற கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story