மின்சார பற்றாக்குறையால் :நாளை இரவு 9 மணிக்கு மின்சாரம் தடைபடுமா? உண்மை என்ன?


மின்சார பற்றாக்குறையால் :நாளை இரவு 9 மணிக்கு மின்சாரம் தடைபடுமா? உண்மை என்ன?
x

பிரதமரின் செய்தியைத் தொடர்ந்து, திடீரென தேவை குறைவதால் மின்சார பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த செய்தி மூலம், அது தொடர்பான சந்தேகங்களையும் அகற்ற முயற்சிப்போம்.

புதுடெல்லி

வருகிற 5-ந்தேதி (நாளை)  இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசல் படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என பிரதமர் நேற்று உரையாற்றினார்.

பிரதமரின் செய்தியைத் தொடர்ந்து, திடீரென தேவை குறைவதால் மின்சார பற்றாக்குறை ஏற்படக்கூடும்   என்று வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த செய்தி  மூலம், அது தொடர்பான  சந்தேகங்களையும் அகற்ற முயற்சிப்போம்.

இந்தியாவில், பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (போசோகோ), தேசிய சுமை அனுப்பும் மையமாக உள்ளது, இது தேசிய மின்சார அமைப்பு நிகழ்நேர நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறது. தேசிய மின்சாரம் அனுப்பும் மையம், பிராந்திய மற்றும் மாநில மின்சாரம் அனுப்பும் மையத்திலிருந்து மின்சாரம் வீடுகளுக்கு சென்று உதவுகிறது

மின்சாரத்திற்கான அதிகபட்ச மின் தேவை தற்போது நாடு முழுவதும் 1,25,817 மெகாவாட்  என்று மின் அமைச்சின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன (ஏப்ரல் 2, 2020 முதல் தகவல்படி).

ஏப்ரல் 5 ஆம் தேதி ஒன்பது நிமிடங்களுக்கு விளக்குகள் அணைக்கப்படும் போது, இந்த தேவை 90 ஆயிரம் மெகாவாட்டிலிருந்து 1 லட்சம் மெகாவாட்டாகக் குறையக்கூடும் என்று  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, அந்த நேரத்தில் நுகர்வு 25 முதல் 35 ஆயிரம் மெகாவாட் குறைவாக இருக்கும்.

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உச்ச நேர தேவை முந்தைய ஆண்டை விட 43 ஆயிரம் மெகாவாட் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில், இது சுமார் 1,68,500 மெகாவாட்டாக இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில், ஏப்ரல் 5 ஆம் தேதி, திடீரென தேவை குறைவதால் மின்சார  செயல்பாடுகள் தோல்வியடையக்கூடும் என்று மக்கள் சமூக ஊடகங்களில் பரவியது குறித்து கேள்வி எழுப்பினர்.

மின்சப்ளை நிறுத்தப்படும் என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள், இது தவறு. இந்த விஷயத்தில், 9 நிமிட காலத்திற்குள் மின்சார சப்ளை பாதிக்கப்படாது, மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படாது என்று மின் அமைச்சின் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Next Story