காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; பாதுகாப்பு படை பதிலடி


காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; பாதுகாப்பு படை பதிலடி
x
தினத்தந்தி 11 April 2020 4:21 AM GMT (Updated: 11 April 2020 4:21 AM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

ஜம்மு,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 24ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இதனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரின் குல்காம் நகரில் டி.எச். போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

Next Story