மராட்டியத்தில் இன்று மேலும் 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் இன்று மேலும் 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 8 May 2020 5:31 PM GMT (Updated: 8 May 2020 5:31 PM GMT)

மராட்டியத்தில் இன்று மேலும் 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியா முழுவதும் 56 ஆயிரத்து 342 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,886 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 540 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் அம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும் 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,063 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 37 பேர் கொரோனா தொற்றுக்கு காரணமாக உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 731 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3,470 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story