இந்தியாவில் மேலும் 35 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் மேலும் 35 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 May 2020 4:30 PM GMT (Updated: 9 May 2020 4:30 PM GMT)

இந்தியாவில் மேலும் 35 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க போராடும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ்காரர் களை குறிவைத்து தாக்க தொடங்கி விட்டது கொரோனா. இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும் அதிகமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதோடு தனது பாதிப்பை நிறுத்திக் கொள்ளாமல், பிற நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம் நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த படையில் ஏற்கனவே சுமார் 200-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மேலும் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 250- ஆக உயர்ந்துள்ளது.

Next Story