மராட்டிய மாநிலத்தில் மேலும் 1,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டிய மாநிலத்தில் மேலும் 1,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 May 2020 4:15 PM GMT (Updated: 15 May 2020 3:47 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 1,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மும்பை, 

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புகளில் மராட்டிய மாநிலம் முதல் இடத்தில் நீடிக்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அங்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

இந்தநிலையில் இன்று மேலும் 1,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 21,467 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் இன்று கொரோனா தொற்றுக்கு 49 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,068 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 6,564 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story