காய்ச்சல், தொண்டை வலி; கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் அரவிந்த கெஜ்ரிவால்


காய்ச்சல், தொண்டை வலி; கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் அரவிந்த கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 8 Jun 2020 8:18 AM GMT (Updated: 8 Jun 2020 9:32 AM GMT)

காய்ச்சல், தொண்டை வலி காரணமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளப்போகு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால்

புதுடெல்லி

கொரோனா வைரஸ் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 2,46,628 ஆக உயர்ந்துள்ளது, இறப்பு எண்ணிக்கை 6,929 ஐ எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் குறித்து புகார் அளித்து, கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படவுள்ளது. 

இதற்கிடையில், முதலமைச்சர் தன்னை தனிமைப்படுத்தி, இன்றைய தினம் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். கடந்த சில நாட்களில், முதல்வர் கெஜ்ரிவால் ஒரு சில கூட்டங்களில் கலந்து கொண்டார், மேலும் டெல்லி செயலகத்தையும் பார்வையிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை, தேசிய தலைநகரில் வழிபாட்டுத் தலங்கள், மால்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படும், ஆனால் ஹோட்டல் மற்றும் விருந்து அரங்குகள் மூடப்படும் என அறிவித்தார்.


Next Story