ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தின்சுகியா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து காஷ்மீர் போலீசாரும் ராணுவத்தினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதிகள் பதுங்கிய வீட்டைச் சுற்றி இன்று காலை அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் கடும் துபபாக்கிச் சண்டை மூண்டது.
இந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் ஏராளமான படைவீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.
ஆபரேஷன் வைப் அவுட் என்ற பெயரில் கடந்த ஒருவாரத்தில் சுமார் 20 பயங்கரவாதிகளை ராணுவம் ஒழித்துக் கட்டியுள்ளது.
Related Tags :
Next Story