டெல்லியில் இன்று புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் இன்று புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 Jun 2020 6:16 PM GMT (Updated: 16 Jun 2020 6:16 PM GMT)

டெல்லியில் மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள கொடிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட்டுள்ளது. இந்திய அளவில் மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. டெல்லியிலும் கொரோனா பரவல் புதிய வேகமெடுத்து பரவி வருகிறது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் புதிதாக 1 ஆயிரத்து 859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44,668 ஆக அதிகரித்து உள்ளது.

இதே போல மாநிலத்தில் ஒரே நாளில் 93  பேர் நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,837 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 16,500 பேர் குணமடைந்துள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story