சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சி


சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சி
x
தினத்தந்தி 1 July 2020 7:00 AM GMT (Updated: 1 July 2020 7:00 AM GMT)

சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி: 

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் எல்லை தகராறு தொடர்பாக அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியில், சீனா இப்போது திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சிக்கிறது.

இந்திய விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சீனா இரண்டு திபெத்திய நாட்டினரை நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயன்ற விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவர்களில் ஒருவர் திபெத்திய-சீன இராணுவத்தின் ஒருங்கிணைந்த பகுதியான மக்கள் ஆயுத காவல்துறையின் சிறப்பு ஏஜெண்டு ஆவார்.

எல்லையிலும், இந்தியாவின் உள்பகுதியிலும் அமைதியின்மையை பரப்ப சீனத் தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரண்டாவது நபர் திபெத்திய நாட்டவர் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் அதிக செல்வாக்குள்ள சிலருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

அவர்கள் இருவரின் பெயர்  தாஷி மற்றும் டோர்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாஷி திபெத்தின் தக்த்சே நகரில் வசிப்பவர். பின்னர் அவர் லாசா நகரில் குடியேறினார், அதன் பின்னர் அவர் மக்கள் ஆயுத காவல்துறையின் இரண்டாம் படைப்பிரிவில் சேர்ந்தார், மேலும் 2017 ஆம் ஆண்டில் சிறப்பு பயிற்சிக்காக செங்டுவுக்கு அனுப்பப்பட்டார்.

தகவல்களின் படி, டோர்ஜியின் தொடர்புகளைப் பயன்படுத்தி, சீன இராணுவத்தின் சிறப்பு உளவாளிகள் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் தனது வலையமைப்பை விரிவுபடுத்த விரும்புகிறார், மேலும் மடங்கள் இருக்கும் இடங்களில் சீன உளவாளிகளின் வலையமைப்பை மேலும் பரப்ப திட்டமிட்டு உள்ளார்.

டோர்ஜி முதலில் திபெத்தில் உள்ள டோர்பி மாவட்டத்தில் வசிப்பவர் மற்றும் 2015 ஆம் ஆண்டு முதல் சீன இராணுவத்தால் திபெத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு திபெத்திய நாட்டினரின் சரியான இலக்கு மற்றும் அவர்களின் இறுதி நோக்கம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், அவர்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

Next Story