மராட்டியத்தில் இன்று மேலும் 22,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


மராட்டியத்தில் இன்று மேலும் 22,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 13 Sep 2020 2:47 PM GMT (Updated: 13 Sep 2020 2:47 PM GMT)

மராட்டியத்தில் இன்று மேலும் 22,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 22,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 416 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 22,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,60,308 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 416 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,531 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 11,549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 7,40,061 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,90,344 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story