நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்


நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2020 3:32 AM GMT (Updated: 14 Sep 2020 3:32 AM GMT)

நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.

முதல் நாளான இன்று மக்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக இன்று வருகை தந்த திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்தும் புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வை கைவிட வலியுறுத்தும் பதாகைகளையும் எம்.பி.க்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,தமிழகத்தில் மொத்தம் 11 மாணவர்கள் நீட் தேர்வுகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த போதும் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நீட் தேர்வு தகர்த்து வருகிறது


Next Story