நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு


நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 23 Sep 2020 5:22 PM GMT (Updated: 23 Sep 2020 5:22 PM GMT)

நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14-ந் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்த கூட்டத்தொடர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

Next Story